கல்யாணமோ கல்யாணம் ...

"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களும் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... " என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா ? இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... "Same Blood" நு ...

நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி "Brahmin - IYER" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ...

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ...

ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல ? இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல ?

ஆமாம் உங்க பையனுக்கு மட்டும் 5 கல்யாணம் ஆய்டுத்து பாருங்கோ, வாய மூடிண்டு அந்த பொண்ணுக்கு என்ன நக்ஷத்திரம் நு சொல்லுங்கோ.

ஹ்ம்ம், பூராடம் நு போட்டுருக்கு டி ... அதுவும் எட்டாம் பாதம் ...

அம்மா, நம்ப சேகருக்கு பூராடம் ஒத்து போகுமா நு அந்த சார்ட்ட பார்த்து சொல்லுங்கோ ?

பாட்டி உடனே, அவாளோட பூத கண்ணாடிய வெச்சுண்டு அந்த சார்ட்ட பாக்கறா ...

பூராடம் 3, 5, 6 ஆம் பாதம் மட்டும் தான் டா சேரும், இது சேராது ...

சரி விடு, இந்த பொண்ணு இல்லாட்டி நம்ப கொழந்தைக்கு வேற பொண்ணே கிடைக்க மாட்டாளா (கவனிக்கவும், இங்கு குழந்தையின் வயது 32)

ம்ஹ்ம்ம், இப்படி சொல்லி சொல்லியே 8 வருஷமா பொண்ணு தேடிண்டு இருக்கோம்

உடனே ஒரு போன் கால் வருது ...

ஹல்லோ, நாங்க தாம்பரம் லேர்ந்து பேசறோம், உங்க பையனோட ad ஹிண்டு ல பார்த்தோம், மேற்கொண்டு பேசலாம் நு போன் பண்ணினோம், உங்காத்து பையனுக்கு இன்னும் செட்டில் ஆகலையே ?

இல்ல இல்ல, அதெல்லாம் ஆகாது ... ஐ யாம் சாரி, அதெல்லாம் ஆகல. என் பையனோட ad தான் ஹிண்டு ல 5 வருஷமா வந்துண்டே இருக்கே, ஹிண்டு வே "தொடரும் ..." நு தானே போடறா ... நீங்க சொல்லுங்கோ ...

என் பொண்ணு BE படிச்சுருக்கா, சென்னை ல பேங்க் ல மானேஜேர் ஆ வொர்க் பண்ணறா, உங்க பையன் என்ன பண்ணறான் ?

என் பையன் பெங்களூர் ல சாப்ட்வேர் கம்பெனி ல மானேஜேர் ஆ வொர்க் பண்ணறான், அவனுக்கு கீழ 300 பேர் வேலை செய்யறா (ஆமாம், பையன் 2nd floor ல இருக்கான், அவனுக்கு கீழ 1st floor இருக்கு அதுல 300 பேர் வேலை செய்யத்தானே செய்வாங்க)

உங்க பொண்ணோட நக்ஷத்திரம் என்ன ?

என் பொண்ணோட நக்ஷத்திரம் அனுஷம்

அனுஷமா ... எத்தனாவது பாதம் ? (அவன் அவனுக்கு பொண்ணு கிடைக்கறதே கஷ்டம், இதுல எத்தனாவது பாதம் .... பக்கத்தாத்து பூதம் நு பேசிண்டு இருந்தா, வெளங்கிடும் ...)

6 ஆம் பாதம்

உங்க பையனோட நக்ஷத்திரம் என்ன ?

என் பையனுக்கு மூலம் ... ஐயயோ பயபடாதீங்கோ, நா வியாதியா பத்தி சொல்லல, இது அவனோட ஸ்டார் மூலம் நு சொல்ல வந்தேன்

உங்க பையனோட போட்டோ எங்கயாவது அப்லோட் பண்ணிருக்கேளா ?

இருக்கே - http://www.nevergetmarried.com அப்படிங்கற சைட் ல இருக்கு, இது தான் அவனோட ID-999999 போய் பார்த்துகொங்கோ ... அப்படியே உங்க பொண்ணோட போட்டோ அனுப்பினா நல்லா இருக்கும் ....

எங்க பொண்ணு ஜம்முனு கிளி மாதிரி இருப்பாளாக்கும்

அதுக்கு நு மரம் மரமா உங்க பொண்ண தேட முடியுமா ? நீங்களும் எங்கயாவது அப்லோட் பண்ணிருக்கேளா ? இப்படி தான் போன வாரம் ஒரு மாமி அவாளோட பொண்ணு ஜம்முனு இருப்பா நு போட்டோ லிங்க் அனுப்பினா, பொண்ணு ஆனா கும்முன்னு இருந்தா, போட்டோ டவுன்லோட் ஆரத்துகே லேட் ஆச்சு நா பார்த்துகோங்களேன்

எங்காத்து பொண்ணோட போட்டோ கூட http://www.nevergetmarried.com ல தான் போட்டுருக்கோம், அவளோட ID-888888

நாங்க எங்க ஜோசியர் கிட்ட ஜாதகத்த காமிச்சுட்டு பொருந்திருந்துது நா, நம்ப மேற்க்கொண்டு பேசுவோம்.

எல்லாருக்கும் சொல்லற அதே பதில சொல்லிட்டு போன்ந வெச்சுட்டார்.

என்னண்ணா சொன்ன ? ஏதாவது தேறுமா ? ஊருல எல்லாருக்கும் கல்யாணம் ஆகறது, நம்ப சேகருக்கு மட்டும் தள்ளிண்டே போறது, நம்ப (32 வயசு) குழந்தைக்கு என்ன குறைச்சல், ராஜாவாட்டுமா இருக்கான்.

ஆமாம், கிரீடமும், வாளும் குடுத்து, VGP வாசல் ல நிக்க வெச்சா, ராஜா மாதிரி தான் இருப்பான்.

இப்படி தான் எல்லா வரணும் தட்டிண்டே போறது, பகவான் என்னிக்கு தான் கண்ணா தொரப்பாரோ.

அடி போடி இவளே, போன வாரம் பழைய பேப்பர் போடறச்சே அந்த ஆள் என்ன தெரியுமா சொல்லறான் ? என்ன சார் நீயும் அஞ்சு வருஷமா உன் புள்ளைக்கு பொண்ணு தேடற, நீ தூக்கி போட்ட ஜாதகத்த வெச்சு நானே ஒரு "ஜோதிட நிலையம்" ஆரம்பிசுருக்கலாம் போலருக்கே நு கிண்டல் பண்ணறான், இது போறாது நு, நம்ப பையனோட ஜாதகத்த பெரிய சைஸ் ல ப்ளோ அப் பண்ணி அவன் கடை வாசல் ல மாட்டடுமா நு வேற கேட்கறான்.

ஏன்னா, நீங்க அந்த ஜாதக file ல, முன்னாடி ஒரு பெரிய புள்ளையார் சுழி போட்டுருக்கேளே, நாளாக நாளாக அது என் கண்ணுக்கு பெரிய நாமம் மாதிரி தெரியுது நா.

உன் கண்ணுக்கும் நாமம் மாதிரி தான் தெரியறதா, என் கண்ணுக்கும் அப்படி தான் தெரியறது, சரி விடு, ஆண்டவன் பார்த்துப்பான்...

என்ன மக்களே, படிச்சு நல்லா சிரிசீங்களா ? இது தான் மக்களே எல்லா வீட்டுலையும் நடக்கற கூத்து. அவங்க பையனுக்கோ, பொண்ணுக்கோ கல்யாணம் ஆகலையேங்கற குறை எல்லார் வீட்டுலையும் இருக்கு. சில பேர் வீட்டுல psycho வா கூட மாறிடறாங்க. இப்போ அவங்க வீட்டுக்கு யாராவது பத்திரிகை குடுக்க வந்தாலே, ஏதோ எழவுக்கு வந்து கூபடாரா மாதிரி மூஞ்சிய தூக்கி வெச்சுப்பாங்க. "உனக்கெல்லாம் கல்யாணம் ஆறது பாவம் என் குழந்தைக்கு (வயசு 32) ஆகா மாட்டேங்கறதே நு பேரு மூச்சு வேற விடுவாங்க .

இந்த கூத்துல நல்லா என்ஜாய் பண்ணறது யாரு தெரியுமோ ? இந்த ஜோசிய காரங்க தான். நீங்க மட்டும் அவங்க கிட்ட ஒரு ஜாதகத்த காமிச்சு பொருத்தம் பார்க்க சொல்லுங்க, மவனே, இல்லாத டகால்ட்டி விடுவாங்க, என்னமோ அவன் சொல்ல போற வார்த்தை ல தான் என் வாழ்கையே அடங்கிருக்கரா மாதிரி. எட்டுல சனி பார்க்கிறான், ஒம்போதுல குரு பார்க்கிறான், ஆறுல செவ்வாயும் புதனும் கிராஸ் பண்ணறான், அது இது நு சீன போட்டு தள்ளுவாங்க.

இது போதாது நு, புது trendaa, இந்த கோவிலுக்கு 100 நாள் எண்ணெய் ஊத்தணும், அந்த கோவிலுக்கு 50 நாள் பெட்ரோல் ஊத்தணும், அந்த சாமிய left ல 50 வாட்டி சுத்தணும், இந்த மாமியோட நைட் ல 10 நாள் சுத்தணும் நு வாய்க்கு வந்த படி பரிகாரம் சொல்லறது, அதையும் பாவம் நம்ப தாய்மார்கள் சிந்தை கலங்காம செய்வாங்க. இதெல்லாம் மாறனும், ஆனா எப்போ நு தான் தெரியல.

இவங்க TV ல பார்க்கற மெகா சீரியல் போறாது நு, இவங்களே வீட்டுல ஒரு மெகா சீரியல் ஓட்டுவாங்க, அது ரொம்பவே சோகமா இருக்கும். ரோடுல யார பார்த்தாலும், என் புள்ளைக்கு பொண்ணு பாருங்களேன், என் பொண்ணுக்கு பையன் பாருங்களேன் நு "குணா" கமல் மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவாங்க, அவங்கள சொல்லியும் குத்தம் இல்ல, நம்ப சொசைட்டி அவங்கள அப்படி மாத்திடுது.

இதெல்லாம் கிண்டலுக்காக சொன்னாலும், உண்மை ல இது யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்.

Comments

  1. Well written!!!

    It was a pleasure reading even though the truth behind it is horrible......had a hearty laugh while reading,that too

    "எத்தனாவது பாதம் .... பக்கத்தாத்து பூதம் நு பேசிண்டு இருந்தா"

    ethukai monai oode nalla ezhuthi erukkenga ...keep it up!!

    ReplyDelete
  2. Awesome post mams. Anyone goin thru the process can relate hehehe.

    best was அந்த சாமிய left ல 50 வாட்டி சுத்தணும், இந்த மாமியோட நைட் ல 10 நாள் சுத்தணும் நு வாய்க்கு வந்த படி பரிகாரம் சொல்லறது,

    ReplyDelete
  3. I thought you were saying some good news. But it is not. That's okay. But whatever you said about were correct. But thank god, I didn't go through such experiences. One question to you, are you going through this experience now?

    ReplyDelete
  4. Just one word "Awesome". It's like watching something which is happening before me.

    Lovely one.

    Telling a strong message in a comedy sense.

    Wish you all the best for your Marriage.

    ReplyDelete
  5. Wonderful post. Previously this used to take place in a girls house but now trend has reversed i suppose.
    My aathukarar used to say " Intha ponnu thedara padaluthala irunthu unnala naan thappichutten"
    Ours is Love marriage.

    ReplyDelete
  6. You have a nice post. Really I enjoyed while reading this!

    This is the incident which is frequently happened in some families.

    Regards,
    Vikiraj
    http://maduraimeenakshitempleforu.blogspot.com

    ReplyDelete
  7. Anonymous8:33 PM

    as ususal full of comedy.i say my thanks to u also.bz after my clge hours when i see ur blooger funny stroys.its make me very happy........ my mind say something ur very different and interesting person....... i want to see ur marriage arrangement also. i pray to god also god plz entha kulanthaiku(30) kula marriage aeitanum... just i joke it. simple say about story"think &laugh &belive the god only in life"

    ReplyDelete
  8. @pavitra - Sonaalum solaatiyum, I am an interesting personality thaan :) btw - indha kuzhandhaikku already 32 :) so no worries, marriage is just a part of life ... :)

    ReplyDelete
  9. Anonymous7:42 PM

    if i hurt u anything my post sorry pa

    ReplyDelete
  10. hey, chance ae illa!! had a good laugh.. lol !! esp with that 'adhelaam aagadhu..sorry, aagala..' and the naamam!

    ha ha..

    but yeah.. typical dialogues in every house!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

Madras Tamil in IT Industry